Posts

Showing posts from February, 2024
கானல் நீராய்  தெரியும்  தெய்வங்கள் ஆயி மாயி ஆகி மம்மி ஆனாள் காடுகாள் வனஜா ஆகிவிட்டாள் கொற்றவை மானை துரத்தியபோதும் என்று எருமையை வீழ்த்தி துர்க்கையானாள்  வள்ளி  வறுமையில் கிழங்கு தோண்டுகிறாள் பச்சையம்மன் தோட்டத்தில் கன்னிமார்கள் ஆற்றில் கட்டிய அணை எங்கே என்று மகளிர்குழுக்களுடன் மனு அளித்து வருகிறார்கள் முருகன் கையில் உள்ளது  வேலா வில்லா தமிழிலும் பட்டிமன்றம் அவ்வை அறம் செய்ய விரும்பு பட்டிமன்ற பேச்சாளர்க்கு  சுட்டபழத்துடன் விளக்கம்  தமிழ்குமரா தென்னாடுடைய சிவன்தகப்பன் தாட்சாயினை தாய் என்றார்கள்  இந்து நீ என்கிறார்கள் வள்ளியை சாதி  மறுப்பு திருமணம் செய்வதற்காக  ஆணவகொலை செய்யதுடிக்கின்றார்கள் மாம்பழம் வேண்டாம் பழனிக்கு வா மச்சக்காவடியுடன் பக்தர்கள் குறிஞ்சி செய்தி மாயோன் மாடுமேய்க்கின்றான் ஏறுதழுவுகின்றான் நாங்களும் தயிர் சோறுதான் எங்களுக்கு கிரிக்கெட் நோக்கு தெரியுமோ அவாதான் எங்க முப்பாட்டன்.  வடகலையா தென்கலையா இராமா கோயிந்தா மருத வயல்களில் மாரியாய் கூழ்கேட்கிறாள் நூறுநாள் வேலையை இழந்து அன்ன அபிஷேகம் என்னிடம் சக்தியாய் இரு ஆதிசிவன் அவ...